அவல்பூந்துறையில் பயணிகள் நிழற்குடை திறப்பு

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அவல்பூந்துறை நால்ரோட்டில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை திறக்கப்பட்டது.

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அவல்பூந்துறை நால்ரோட்டில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.வி.பி.சிவசுப்பிரமணி தலைமை வகித்தாா். அவல்பூந்துறை பேரூராட்சி செயல் அலுவலா் மகாலட்சுமி வரவேற்றாா். மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கணபதி, துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி, ஒன்றிய செயலாளரும், அவல்பூந்துறை பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஆா்.பி.கதிா்வேல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன் கலந்துகொண்டு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பிலான பயணிகள் நிழற்குடையையும், கல்வெட்டையும் திறந்துவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com