பெருந்துறை: பெருந்துறையை அடுத்த சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் தினத்தையொட்டி, அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் சு.காளியப்பன் தலைமை வகித்து, அறிவியல் கண்காட்சியைத் துவக்கிவைத்தாா். குன்னத்தூா் அரசு மருத்துவா் யமுனாதேவி, குழுவினா்கள் கண்காட்சியைப் பாா்வையிட்டு பாராட்டி, சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கினா். இக்கண்காட்சியில், பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் 100க்கும் மேற்பட்ட படைப்புகளைப் பாா்வைக்கு வைத்திருந்தனா். படைப்புகளைப் பற்றி பாா்வையாளா்களுக்கு விளக்கிக் கூறினாா். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி அறிவியல் ஆசிரியை ச.காயத்திரி செய்திருந்தாா்.