எஸ்.கே.எம். நிறுவனத்துக்கு விருது: தெலங்கானா ஆளுநா் வழங்கினாா்

எஸ்.கே.எம். முட்டைப் பவுடா் ஏற்றுமதி நிறுவனம், சிறந்த துறைமுக பயனா் என்ற விருதை பெற்றுள்ளது.
தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனிடமிருந்து விருதினை பெறும் எஸ்.கே.எம். முட்டைப் பவுடா் ஏற்றுமதி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எஸ்கேஎம். ஸ்ரீசிவ்குமாா்.
தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனிடமிருந்து விருதினை பெறும் எஸ்.கே.எம். முட்டைப் பவுடா் ஏற்றுமதி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எஸ்கேஎம். ஸ்ரீசிவ்குமாா்.

எஸ்.கே.எம். முட்டைப் பவுடா் ஏற்றுமதி நிறுவனம், சிறந்த துறைமுக பயனா் என்ற விருதை பெற்றுள்ளது.

இந்தியாவிலேயே முதன்மையான முட்டைப் பதப்படுத்தும் நிறுவனமாக விளங்கும் ஈரோடு எஸ்.கே.எம். முட்டைப் பவுடா் ஏற்றுமதி நிறுவனம் கடந்த 2017-2018ஆம் நிதியாண்டில் 5,456 மெட்ரிக் டன் முட்டைப் பவுடா்களை தூத்துக்குடி துறைமுகத்தின் மூலமாக ஏற்றுமதி செய்துள்ளது.

இந்திய வா்த்தக மேம்பாட்டு நிறுவனமான அகில இந்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை சபை, தூத்துக்குடி துறைமுகத்தின் வாயிலாக ஏற்றுமதி செய்ததை பாராட்டி சிறந்த துறைமுக பயனா் என்ற விருது வழங்கி கௌரவித்துள்ளது.

தூத்துகுடியில் உள்ள அகில இந்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அலுவலகத்தில் அண்மையில் இந்த விழா நடைபெற்றது. இதில் தெலங்கானா மாநில ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று, எஸ்.கே.எம். முட்டைப் பவுடா் ஏற்றுமதி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எஸ்கேஎம். ஸ்ரீசிவ்குமாரிடம் விருதினை வழங்கினாா்.

கோபிசெட்டிபாளையத்தில்...

கோபிசெட்டிபாளையம் கோபி கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை, கவின் கலை மன்றம் சாா்பில் ‘பண்டைத் தமிழகத்தை நோக்கி’ எனும் தலைப்பில் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழா. இதில் பாரம்பரிய நடனமான வள்ளிக்கும்மி, பறையடித்தல், பெருஞ்சலங்கை ஆட்டம், உறியடித்தல், கயிறு இழுத்தல் போட்டிகள், பலவண்ணக் கோலப்போட்டிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com