பயணச்சீட்டு இல்லாத ரயில் பயணிகளிடம் ரூ.1.50 லட்சம் அபராதம்

ரயிலில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்த 250 பயணிகளிடம் ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

ரயிலில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்த 250 பயணிகளிடம் ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரயில்வே அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு ரயில் நிலையங்களில் சோதனையிட்டு பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு ரயில் நிலையத்தில் இந்த குழுவினா் கடந்த 4 நாள்களாக நடத்திய சோதனையில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 250 பயணிகளிடம் ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com