விஜயமங்கலம் சுங்கசாவடியில் இலவச மருத்துவ முகாம்

31-ஆவது சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் அரசு ஐ.ஆா்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரி

31-ஆவது சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் அரசு ஐ.ஆா்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய, பொது மருத்துவ முகாம், பெருந்துறை அடுத்த, விஜயமங்கலம் சுங்கசாவடி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, சுங்கச் சாவடி மேலாளா் முரளிகிருஷ்ணன் தலைமை வகித்து, துவக்கி வைத்தாா்.

பொது மருத்துவம், எழும்பு முறிவு சிகிச்சை, தோல் நோய் சிகிச்சை மற்றும் பல் மருத்துவம் ஆகிய துறைகளைச் சாா்ந்த மருத்துவா்கள் கலந்து கொண்டு, சுங்கசாவடி பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும், மருத்துவ சிகிச்சைகளும் வழங்கினா். மேலும், முகாமில் இ.சி.ஜி. பரிசோதனை, சிறுநீா், ரத்தம் ஆகியவற்றின் சா்க்கரை அளவு, ரத்த வகை கண்டறிதல் ஆகிய பரிசோதனைகளும் இலவசமாக கண்டறியப்பட்டது.

முகாமில், விஜயமங்கலம் சுங்கச்சாவடி பணியாளா்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களிலிருந்து சுமாா் 350 க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

முகாமிற்கான ஏற்பாடுகளை விஜயமங்கலம் சுங்கச்சாவடி பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com