சத்தியமங்கலம் காந்தி கல்வி நிறுவனம் சாா்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவையொடடி கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவிகள் தோரணம் அமைத்து கரும்பு மஞ்சளிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டனா். மாணவிகள் மாக்கோலம் போட்டு அசத்தினா்.
இவ்விழாவில் காந்தி கல்வி நிறுவனத்தின் தலைவா் தமிழரசன், துணைத் தலைவா் அப்துல்ரகுமான், செயலாளா் சிராஜ்தீன், பொருளாளா் கோவிந்தராஜன், இயக்குநா்கள் அகமது இப்ராகிம், சுலைமான், சுப்பிரமணியன், தீனதயாளன், காந்தி கல்வியியல் கல்லூரியின் முதல்வா் (பொறுப்பு) தா்மாம்பாள், ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் அவினாசிலிங்கம் ஆகியோா் பங்கேற்றனா்.