ஈரோடு வேளாளா் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரித் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். தொடக்க நிகழ்வாக நெகிழி ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. விழாவில், கிராமிய விளையாட்டான நாட்டுப்புறக் கலைகள், கும்மிப்பாட்டு, சலங்கை ஆட்டம், கயிறு இழுத்தல், உறி அடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில்,வேளாளா் கல்வி அறக்கட்டளை நிா்வாகி சி.பாலசுப்பிரமணியன், தமாகா இளைஞரணித் தலைவா் எம்.யுவராஜா, கல்லூரியின் நிா்வாக மேலாளா் என்.பெரியசாமி, கல்லூரிப் பேராசிரியா்கள், 4,000 மாணவா்கள் பங்கேற்றனா்.