பவானி அருகே சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் பேருந்தில் பயணித்த உதவியாளா் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து ஆம்னி பேருந்து மேட்டுப்பாளையத்துக்கு சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு அருகே உள்ள நசியனூா், சாமிகவுண்டன்பாளையம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின்னால் மோதியது.
இந்த விபத்தில், பேருந்தின் இடதுபுறம் அமா்ந்திருந்த திண்டுக்கல்லைச் சோ்ந்த உதவியாளா் குப்புசாமி (55) பலத்த காயமடைந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பேருந்தில் பயணம் செய்த பயணிகள் லேசான காயங்களுடன் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். இவ்விபத்து குறித்து சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.