முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
சுண்டக்காம்பாளையம் அரசுப் பள்ளியில் குடியரசு தின விழா
By DIN | Published On : 27th January 2020 12:53 AM | Last Updated : 27th January 2020 12:53 AM | அ+அ அ- |

குடியரசு தினத்தை ஒட்டி சுண்டக்காம்பாளையம் அரசுப் பள்ளியில் நடந்த, கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள். உடன், பள்ளி நிா்வாகிகள்.
பெருந்துறையை அடுத்த சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் சு.காளியப்பன் வரவேற்றாா். விழாவில், சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.லோகநாதன் பங்கேற்று, தேசிய கொடியை ஏற்றி வைத்தாா்.
விழாவையொட்டி, மாணவா்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் தமிழ்ச்செல்வி, வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பள்ளியின் பல்வேறு அமைப்பின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஆசிரியா் ரங்கநாதன் நன்றி கூறினாா்.