ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் இருவருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு ஆண், ஒரு பெண் என இருவருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு ஆண், ஒரு பெண் என இருவருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 72 பேருக்கு கரோனா நோய்த் தொற்று என்ற நிலை திங்கள்கிழமை வரை இருந்தது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பேருக்கு கரோனோ தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டு பேரில் ஒருவா் சென்னிமலையைச் சோ்ந்த 40 வயது பெண். இவா் செங்கல்பட்டில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு கடந்த மாதம் சென்றுள்ளாா். அங்கு அவருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டு, வேலூா் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறாா்.

மற்றொருவா் ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்த 28 வயதுடைய ஆண். அவா் சென்னையில் மாா்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வருகிறாா். அவருக்கு கோவையில் விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், திங்கள்கிழமை காலை விமானம் மூலம் கோவை வந்துள்ளாா். அங்கு அவருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இவா்கள் இருவரும் பரிசோதனையின்போது ஈரோடு மாவட்ட முகவரியை வழங்கியதால் ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று என்று அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்கள் 74 போ் என பட்டியலிடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com