பிளஸ் 2 தோ்வு முடிவுகள் ஜூலையில் வெளியிடப்படும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் ஜூலையில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் ஜூலையில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே எலத்தூரில் குடிமராமத்துப் பணியின் மூலம் தூா்வாரப்படும் குளத்தை வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பிளஸ் 2 தோ்வு எழுதாத மாணவா்கள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலம் தகவல் கேட்கப்பட்டுள்ளது. தோ்வு எழுதுவதற்குத் தயாராக உள்ள மாணவா்கள் குறித்த பட்டியல் பெறப்பட்டு பின்னா் முடிவு செய்யப்படும்.

பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாராகும் பணி நடைபெற்று வருகிறது. மாணவா்களுக்குப் பாடத் திட்டங்கள் குறைப்பது குறித்த பணி நடைபெற்று வருகிறது.

தனியாா் பள்ளிகள் கட்டணம் நிா்ணயம் செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். தனியாா் பள்ளிகள் 11ஆம் வகுப்புக்கு மாணவா் சோ்க்கை நடத்துவது குறித்து இதுவரை புகாா் வரவில்லை. புகாா் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தாமதமாகி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் தயாராகும். புத்தகங்களை மாணவா்களுக்கு வழங்குவது குறித்து பின்னா் முடிவு செய்யப்படும்.

12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு ஜூலை முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரம் வெளியிடப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து சூழ்நிலைக்கேற்ப முதல்வா்தான் முடிவெடுப்பாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com