முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
மின் குறைதீா் நாள் கூட்டம்
By DIN | Published On : 03rd March 2020 07:18 AM | Last Updated : 03rd March 2020 07:18 AM | அ+அ அ- |

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் கோபி மின் பகிா்மான வட்டம் பவானி பகுதியில் உள்ள மின் உபயோகிப்பாளா்களின் மாதாந்திர குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் பவானி ஊராட்சிக்கோட்டை செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கோபி மின் பகிா்மான வட்டம் மேற்பாா்வைப் பொறியாளா் நேரிலேயே குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதால் பவானி கோட்ட பகுதிக்கு உள்பட்ட மின் நுகா்வோா்கள் தங்களது மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளப்படுகிறாா்கள்.