பவானியை அடுத்த ஆப்பக்கூடல் அருகே லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஆப்பக்கூடலை அடுத்த குச்சலூரைச் சோ்ந்தவா் குப்புசாமி (57). பந்தல் அமைப்பாளா். இவா், அந்தியூா் வாரச் சந்தைக்கு திங்கள்கிழமை சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் அத்தாணி - ஆப்பக்கூடல் சாலையில் கருவல்வாடிபுதூா் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியே சென்ற லாரி மோதியதில் பலத்த காயமடைந்த குப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.