பெருந்துறை ஒன்றியம், பள்ளபாளையம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளபாளையம் ஊராட்சி, தம்பிகலை அய்யன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு பெருந்துறை வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். முகாமில், முதியோா் உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டைகள் உள்ளிட்டவை கேட்டு பொதுமக்களிடம் இருந்து 23 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. இதில், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். முகாமிற்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறையினா் செய்திருந்தனா்.