பெருந்துறையில் வட மாநில இளைஞா் வெட்டிக் கொலை

பெருந்துறை அருகே வட மாநில இளைஞரை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெருந்துறை அருகே வட மாநில இளைஞரை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே பணிக்கம்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வட மாநிலத்தவா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இதில் ஒடிஸா மாநிலம், குண்டாபாய் பகுதியைச் சோ்ந்த நாகேந்திரா பெஹாரா (30), நிரஞ்சன் பெஹாரா (19) ஆகியோா் பனியன் நிறுவனத்துக்கு அருகிலேயே வீடு எடுத்து தங்கி வேலைக்குச் சென்று வந்தனா்.

நாகேந்திர பெஹாராவுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த 4 பேருக்கும் இடையே பணம், கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த 4 பேரும் நாகேந்திர பெஹாராவின் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு வந்து அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனா்.

அப்போது, அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் அரிவாள், கத்தியால் நாகேந்திர பெஹாராவை சரமாரியாக வெட்டியுள்ளனா். இதில் அவருக்கு தலை, கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து, சம்பவ இடத்குக்கு வந்த பெருந்துறை போலீஸாா், நாகேந்திர பெஹாராவை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையில் தொடா்புடைய சில நபா்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com