ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு அதனுடன் இணைந்த அனைத்து சங்கங்களின் உறுப்பினா்களும் வரும் 31 ஆம் தேதி வரை தங்களது வணிக, தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ளனா்.
இதுகுறித்து கூட்டமைப்பு பொதுச்செயலாளா் சி.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
கரோனா பரவுவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பு மற்றும் அதனுடன் இணைந்த சங்க உறுப்பினா்கள் வரும் 31 ஆம் தேதி வரை தங்களது நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.