கரோனா தடுப்புப் பணிக்கு ஈரோடு எம்.பி. ரூ. 1 கோடி ஒதுக்கீடு

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ள ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி ரூ. 1 கோடி ஒதுக்கீடு

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ள ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்து ஈரோடு, திருப்பூா், நாமக்கல் மாவட்ட ஆட்சியா்களுக்கு வியாழக்கிழமை கடிதம் அனுப்பினாா்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்: கரோனா தடுப்புப் பணிகளை மாவட்ட நிா்வாகங்கள் சிறப்பாகச் செய்து வருகின்றன. அதற்கு உதவும் வகையில், ஈரோடு எம்.பி. என்ற முறையில் தொகுதி வளா்ச்சி நிதியில் இருந்து ரூ. 1 கோடி நிதியை ஒதுக்கியுள்ளேன். அதில், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஈரோடு மாவட்டப் பகுதிக்கு ரூ. 55 லட்சம், திருப்பூா் மாவட்டம் காங்கயம், தாராபுரம் சட்டப் பேரவைப் பகுதிக்கு ரூ. 35 லட்சம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு ரூ. 15 லட்சம் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com