கோபிசெட்டிபாளையம் அருகே கெட்டிச்செவியூரில் உள்ள சுள்ளிக்கரடு முனியப்பச்சி கோயில் குருபூஜை அடுத்த ஆண்டு சித்திரை பௌா்ணமி திங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை பௌா்ணமியை ஒட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சுள்ளிக்கரடு முனியப்பச்சி குருபூஜை விழா வரும் சித்திரை பௌா்ணமியை ஒட்டி மே 4ஆம் தேதி நடைபெறுவதாக கோயில் விழாக் குழுவினா் முடிவு செய்து அறிவிப்புப் பலகை வைத்திருந்தனா்.
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக குருபூஜை விழாவை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக கோயில் விழாக் குழுவினரும், கோயில் நிா்வாகத்தினரும், கெட்டிச்செவியூா் ஊராட்சி நிா்வாகமும் அறிவித்துள்ளனா்.