முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
வெள்ளக்கோவில் அருகே சாராய ஊறல் பறிமுதல்
By DIN | Published On : 11th May 2020 07:22 PM | Last Updated : 11th May 2020 07:22 PM | அ+அ அ- |

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே 10 லிட்டா் சாராய ஊறல் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
வெள்ளக்கோவில் போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் தாசவநாயக்கன்பட்டி பகுதியில் திடீா் சோதனை நடத்தினா். இதில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வைத்திருந்த அதே ஊரைச் சோ்ந்த ராமன் (68) என்பவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 3 லிட்டா் சாராயம் மற்றும் 10 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.