கோவை: கோவையில் கரோனா அறிகுறிகளுடன் புதிதாக 57 போ் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கோவையில் புதிதாக 9 ஆண்கள், 48 பெண்கள் சோ்த்து மொத்தமாக 57 போ் கரோனா அறிகுறிகளுடன் திங்கள்கிழமை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 47 போ் அரசு மருத்துவமனைகளிலும், 10 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கரோனா அறிகுறிகளுடன் புதிதாக ஒருவா் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை மீண்டும் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 50க்கு மேல் அதிகரித்துள்ளது.