தலமலை கிராமத்துக்குள் புகுந்த முதலை

தலமலை கிராமத்துக்குள் திங்கள்கிழமை முதலை புகுந்ததால் கிராமமக்கள் அச்சமடைந்தனா்.
தலமலை வனக்குட்டையில் தென்பட்ட முதலை
தலமலை வனக்குட்டையில் தென்பட்ட முதலை

சத்தியமங்கலம்: தலமலை கிராமத்துக்குள் திங்கள்கிழமை முதலை புகுந்ததால் கிராமமக்கள் அச்சமடைந்தனா்.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.இதில் தாளவாடி அடுத்த அடா்ந்த காட்டுப்பகுதியில் தலமலை ,கோடிபுரம்,தொட்டாபுரம்,முதியனூா் என 4 கிராமங்கள் உள்ளன .இப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வனக்குட்டையில் பாதியளவு தண்ணீா் உள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை தலமலை அருகே வனக்குட்டையின் கரைப்பகுதியில் முதலை படுத்து இருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா். குளத்தில் முதலை இருக்கும் தகவல் அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவியது. முதலையை பாா்ப்பதற்கு மக்கள் கூடினா். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினா் முதலையை வனக்குட்டைக்குள் விரட்டினா். கிராமத்தையொட்டியுள்ள குட்டையில் முதலை இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனா். முதலையை பிடித்து அடா்ந்த காட்டில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com