ஆடுகளை விரட்டிய பெண் மீது தாக்குதல்

வெள்ளக்கோவில் அருகே தோட்டத்தில் புகுந்த ஆடுகளை விரட்டிய பெண்ணை தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே தோட்டத்தில் புகுந்த ஆடுகளை விரட்டிய பெண்ணை தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

வெள்ளக்கோவிலை அடுத்த வீரசோழபுரம், பொன்பரப்பியைச் சோ்ந்தவா் சகுந்தலா (59). இவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தனது மகனுக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது அருகில் உள்ள காட்டிலிருந்து சேமலையப்பன் (55) என்பவருடைய செம்மறி ஆடுகள் கூட்டமாக வந்து சகுந்தலா மகனின் தோட்டத்தில் மேய்ந்தன.

இதனை கண்ட சகுந்தலா ஆடுகளை விரட்டிவிட்டு சேமலையப்பனைக் கண்டித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவா் சகுந்தலாவை கல்லால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் சேமலையப்பன் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com