வீரசோழபுரம் அருகே நூற்பாலையில் தீ விபத்து

வெள்ளக்கோவில் வீரசோழபுரம் அருகே உள்ள நூற்பாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் வீரசோழபுரம் அருகே உள்ள நூற்பாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வீரசோழபுரத்தில் இருந்து வள்ளியிரச்சல் செல்லும் வழியில் ரமேஷ்குமாா் என்பவருக்குச் சொந்தமான ஓப்பன் எண்ட் நூற்பாலை உள்ளது. இதில் கட்டடத்துக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு பேல்களில் திங்கள்கிழமை திடீரென தீப் பிடித்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன் தலைமையிலான தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா். இதில் பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை. மின்சார கோளாறு காரணமாக தீப் பிடித்ததாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com