மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 49 லட்சத்துக்கு எள் ஏலம் நடைபெற்றது.
மொடக்குறிச்சி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 694 மூட்டைகளில் 51 ஆயிரத்து 757 கிலோ எடையுள்ள எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், கருப்பு எள் அதிகபட்சமாக கிலோ ரூ. 106.09க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 91.69க்கும், சிவப்பு எள் அதிகபட்சமாக ரூ. 102.42க்கும், குறைந்தபட்சமாக ரூ. 89.49க்கும் விற்பனையாயின. மொத்தம் ரூ. 49 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.