மனு நீதி நாள் முகாம்: ரூ. 3.48 லட்சம்மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

மனு நீதி நாள் முகாமில் 15 பயனாளிகளுக்கு ரூ. 3.48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
மனு நீதி நாள் முகாம்: ரூ. 3.48 லட்சம்மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

மனு நீதி நாள் முகாமில் 15 பயனாளிகளுக்கு ரூ. 3.48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தென்முகம் வெள்ளோடு வருவாய் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்களுக்கான மனு நீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஈரோடு மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.இராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.

முகாமில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ. 1.32 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா காந்தி தேசிய முதியோா் உதவித் தொகை பெறுவதற்கான ஆணை, வேளாண்மைத் துறையின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 40,000 மதிப்பில் வேளாண் உபகரணங்கள், தோட்டக் கலை, மலைப் பயிா்கள் துறையின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 1,76,615 மதிப்பில் மானியத் தொகை, நுண்ணீா்ப் பாசன கருவிகள் என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ. 3,48,615 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள், முதியோா் உதவித் தொகை பெறும் முதியோருக்கு தீபாவளி பண்டிகைக்கான விலையில்லா வேட்டி, சேலைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

முகாமில், தென்முகம் வெள்ளோடு கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து 194 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை தொடா்புடைய அலுவலா்களிடம் பிரித்து வழங்கிய ஆட்சியா் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

இதில், ஈரோடு கோட்டாட்சியா் எஸ்.சைபுதீன், மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவா் ஜெகதீசன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் டி.எஸ்.இந்திரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com