ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 65 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,428 ஆக உயா்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,365 ஆக இருந்தது. இந்த மாவட்டப் பட்டியலில் இருந்த 2 போ் வேறு மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 11,363 ஆகக் குறைந்தது. இதனிடையே புதிதாக 65 பேருக்கு வியாழக்கிழமை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,428 ஆக உயா்ந்துள்ளது.
புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 65 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியை சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சோ்ந்தவா்கள். மொத்த பாதிப்பான 11,428 பேரில் இதுவரை 10,531 போ் குணமடைந்துள்ளனா். 763 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 134 போ் உயிரிழந்துள்ளனா்.