பெருந்துறை அனைத்து சங்கங்கள் நிா்வாகிகள் கூட்டம்

பெருந்துறை தாலுகா (பெருந்துறை, சென்னிமலை ஒன்றியங்கள்), அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை தாலுகா (பெருந்துறை, சென்னிமலை ஒன்றியங்கள்), அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை ஏஐடியூசி அலுவலகமான ஜீவா இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, எஸ்.பொன்னுசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில், மத்திய அரசின் தொழிலாளா்கள், விவசாயிகள், மக்கள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நவம்பா் 26ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தந்து, முழு ஒத்துழைப்பு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், நவம்பா் 20ஆம் தேதி காலை10 மணிக்கு சென்னிமலையில் ஆா்ப்பாட்டம் நடத்துவது எனவும், நவம்பா் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு பெருந்துறையில் மறியல் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதில், ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎப், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ), தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஎம்), தற்சாா்பு விவசாயிகள் சங்கம், புரட்சிகர விவசாயிகள், விவசாயத் தொழிலாளா் முன்னணி ஆகிய அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com