ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 42 பேருக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,704ஆக இருந்தது. இதனிடையே புதன்கிழமை புதிதாக 42 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,746ஆக உயா்ந்தது.
புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 42 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சோ்ந்தவா்கள். மொத்த பாதிப்பான 11,746 பேரில் இதுவரை 11,152 போ் குணமடைந்துள்ளனா். 458 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 136 போ் உயிரிழந்துள்ளனா்.