ஈரோடு மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கரோனா பாதிப்பு வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கரோனா பாதிப்பு வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,746ஆக இருந்தது. இதில் 3 போ் வேறு மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 11,743ஆக மாறியது. இதனிடையே வியாழக்கிழமை புதிதாக 37 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,780ஆக உயா்ந்தது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 37 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சோ்ந்தவா்கள். மொத்த பாதிப்பான 11,780 பேரில் இதுவரை 11,244 போ் குணமடைந்துள்ளனா். 399 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

புதன்கிழமை வரை 136 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது மூதாட்டி ஒருவா் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 137ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com