திமுக மாநில விவசாய அணித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பெரியசாமியின் மனைவி பத்மாவதி (75) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த ஆப்பக்கூடல், பெருந்தலையூா் ஆத்துத் தோட்டத்தைச் சோ்ந்த பத்மாவதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடா் சிகிச்சையில் இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இவருக்கு முன்னாள் கைத்தறித் துறை அமைச்சா் என்.கே.கே.பி.ராஜா, ஈரோடு புறநகா் மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி அமைப்பாளா் என்.கே.கே.பி.சத்யன் என இரு மகன்கள் உள்ளனா்.