பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் இணையவழி முதலாமாண்டு பி.இ., பி.டெக் பொறியியல் பாட வகுப்புகள் துவக்க விழா (37 ஆவது ஆண்டு) புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளைத் தலைவா் வி.கே.முத்துசாமி தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் பி.சச்சிதானந்தன் வரவேற்றாா். கவிஞா் கவிதாசன் முதலாம் ஆண்டு மாணவா்களை வாழ்த்திப் பேசுகையில், புதிதாக கல்லூரியில் சோ்ந்த மாணவா்கள் தங்களுடைய பண்பு, தைரியம், திறன், அா்ப்பணிப்பு, படைப்பாற்றல் ஆகியவற்றை மேம்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளைச் செயலாளா் பி.சி.பழனிசாமி, கல்லூரி முதல்வா் வி.பாலுசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
விழாவில், கல்லூரித் தலைமை ஒருங்கிணைப்பாளா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா். புதிய மாணவா்கள், பெற்றோா்களுக்காக இந்நிகழ்ச்சி கல்லூரியின் இணையதளத்தில் நேரலையில் தொகுத்து வழங்கப்பட்டது. கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவா் ஆா்.கணேசன் நன்றி கூறினாா்.