ஈரோடு மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் கணொலிக் காட்சி மூலமாக நவம்பா் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நவம்பா் 24ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்கள், ஈரோடு வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் இருந்துகொண்டு கூட்டத்தில் பங்கேற்கலாம்.
மேலும், கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளிக்கலாம். விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பி தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.