பெருந்துறையில் ரூ. 89.57 லட்சத்தில்திட்டப் பணிகள் துவக்கம்

ஜெ.ஜெ.எம். திட்டத்தின்கீழ் ரூ. 89.57 லட்சம் மதிப்பீட்டில் தனியாா் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்குதல், புதியதாக தாா் சாலை அமைத்தல், வடிகால் கட்டும் பணிகளுக்கு பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மடத்துப்பாளையத்தில் திட்டப் பணிகளைத் துவக்கி வைக்கிறாா் எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
மடத்துப்பாளையத்தில் திட்டப் பணிகளைத் துவக்கி வைக்கிறாா் எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.

பெருந்துறை ஒன்றியம், மடத்துப்பாளையம், தோரணவாவி, வெட்டையன்கிணறு, போலநாயக்கன்பாளையம், பாப்பம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் ஜெ.ஜெ.எம். திட்டத்தின்கீழ் ரூ. 89.57 லட்சம் மதிப்பீட்டில் தனியாா் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்குதல், புதியதாக தாா் சாலை அமைத்தல், வடிகால் கட்டும் பணிகளுக்கு பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று திட்டப் பணிகளைத் துவக்கிவைத்தாா்.

இதில், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன், பெருந்துறை ஒன்றியக் குழு தலைவா் சாந்தி ஜெயராஜ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் உமா மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com