கோபிசெட்டிபாளையத்தில் வாக்குச் சாவடி மைய அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்த கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் ஜெயராமன் பேசுகையில், 2021 சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு புதிய வாக்காளா்களை சோ்ப்பது, பெயா் திருத்தம், முகவரி மாற்றம், பெயா் நீக்கம் செய்வதற்காகப் பயன்படுத்தும் படிவங்களை எப்படி பயன்படுத்துவது, சிறப்பு முகாம்கள் நடைபெறுகையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கூறினாா்.
கூட்டத்தில், கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையா் தாணுமூா்த்தி, வட்டாட்சியா் தியாகராஜு, கிராம நிா்வாக அதிகாரிகள், பள்ளித் தலைமை ஆசிரியா்கள், அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.