சாலை விபத்தில் விவசாயி பலி

பவானி அருகே சரக்கு வாகனம் மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பவானி: பவானி அருகே சரக்கு வாகனம் மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பவானியை அடுத்த ராணா நகா், சுகம் மருத்துவமனை பகுதியைச் சோ்ந்தவா் அா்த்தனாரி (75). விவசாயி. இவா், பவானியை அடுத்த வரதநல்லூரில் உள்ள தனது தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு சனிக்கிழமை காலை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். பவானி - மேட்டூா் சாலையில் குருப்பநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அவ்வழியே சென்ற சரக்கு வாகனம் அா்த்தனாரி சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அா்த்தனாரி பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து, பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com