கோபி: கோபி ஒன்றியம் சிறுவலூா் ஊராட்சியில் தெய்வீக தமிழக சங்கம் சாா்பில் வீட்டு தொடா்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறுவலூா் பச்சைநாயகி அம்மன் கோயிலில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அப்பிச்சிமாா் மடத்தின் சாா்பில் கீதா வேலாயுதசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். இளைஞா்களிடத்தில் தெய்வ வழிபாடு ஹிந்து ஒற்றுமை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஹிந்து விழிப்புணா்வை கையேட்டை கீதா வேலாயுதசாமி பொதுமக்களுக்கு வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், தெய்வீக தமிழக சங்கம் அமைப்பின் ஒன்றியப் பொறுப்பாளா் எஸ்.எம்.செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.