பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிப் பகுதியில் உள்ள 28 உழைக்கும் மகளிருக்கு தலா ரூ. 25,000 மானியத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் ரா.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று 28 உழைக்கும் மகளிருக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களை வழங்கிப் பேசினாா்.
இதில், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், மாவட்ட இலக்கிய அணித் தலைவா் அருள்ஜோதி செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.