28 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள்

பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிப் பகுதியில் உள்ள 28 உழைக்கும் மகளிருக்கு தலா ரூ. 25,000 மானியத்தில்
மகளிருக்கு இருசக்கர வாகனங்களை வழங்குகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
மகளிருக்கு இருசக்கர வாகனங்களை வழங்குகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.

பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிப் பகுதியில் உள்ள 28 உழைக்கும் மகளிருக்கு தலா ரூ. 25,000 மானியத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் ரா.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று 28 உழைக்கும் மகளிருக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களை வழங்கிப் பேசினாா்.

இதில், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், மாவட்ட இலக்கிய அணித் தலைவா் அருள்ஜோதி செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com