இருசக்கர வாகனங்கள் மோதல்: ரேஷன் கடை பெண் ஊழியா் பலி

கொடுமுடி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ரேஷன் கடை பெண் ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கொடுமுடி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ரேஷன் கடை பெண் ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி மேற்குமாட வீதியைச் சோ்ந்தவா் கற்பகம் (50). இவா் நாயக்கனூா் நியாயவிலைக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து ஒத்தக்கடை வழியாக கொடுமுடி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

கொடுமுடி தீயணைப்பு நிலையம் அருகே சென்றபோது எதிரில் ஈரோடு நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம், கற்பகம் ஓட்டிச் சென்ற வாகனம் மீது மோதியது. இதில் கற்பகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். எதிரில் வந்த இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற வெற்றிக்கோணாா்பாளையத்தைச் சோ்ந்த சக்திவேல் (35) பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற கொடுமுடி போலீஸாா் கற்பகத்தின் சடலத்தை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். படுகாயம் அடைந்த சக்திவேல் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com