முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
வேன் மோதி முதியவா் சாவு
By DIN | Published On : 04th October 2020 10:40 PM | Last Updated : 04th October 2020 10:40 PM | அ+அ அ- |

பெருந்துறை: சென்னிமலை அருகே, வேன் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
சென்னிமலையை அடுத்த சில்லாங்கட்டுவலசு பகுதியைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (75). கூலி தொழிலாளி. இவா், சென்னிமலைபாளையத்திலுள்ள தோட்டத்து வேலைக்காக சனிக்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த வேன் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தலையில் பலத்த அடிபட்ட அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து, சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.