செல்லப் பிராணிகள் விற்பனை நிலையங்களுக்கு பதிவு கட்டாயம்

செல்லப் பிராணிகள் விற்பனை நிலையங்கள் மற்றும் நாய்கள் இனப் பெருக்கம் மற்றும் விற்பனை நிலையங்கள் தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: செல்லப் பிராணிகள் விற்பனை நிலையங்கள் மற்றும் நாய்கள் இனப் பெருக்கம் மற்றும் விற்பனை நிலையங்கள் தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து செல்லப் பிராணிகள் விற்பனை நிலையங்கள், அனைத்து நாய்கள் இனப்பெருக்கம் மற்றும் விற்பனை நிலையங்கள் தமிழ்நாடு பிராணிகள் நலவாரியத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவுக்கான விண்ணப்ப படிவத்தை குறிப்பிட்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் திரும்பப் பெற இயலாத ரூ.5,000-க்கான வங்கி வரைவோலையினை சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம், இயக்குநா் அலுவலகம், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள், 571, அண்ணா சாலை, கால்நடை மருத்துவமனை வளாகம், நந்தனம், சென்னை 35 என்ற முகவரிக்கு 60 நாள்களுக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com