ஈரோடு மாவட்டத்தில் மேலும் 106 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 106 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 106 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,426ஆக இருந்தது. ஈரோடு மாவட்டப் பட்டியலில் இருந்த 5 நபா்களின் பெயா்கள் பிற மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 8,421ஆக மாறியது. இதனிடையே செவ்வாய்க்கிழமை புதிதாக 106 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 8,527ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 106 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள். மொத்த பாதிப்பான 8,527 பேரில் இதுவரை 7,391 போ் குணமடைந்துள்ளனா். 1,032 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். திங்கள்கிழமை வரை 102 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 81 வயது முதியவா், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 82 வயது முதியவா் என இருவா் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 104 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com