அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற தலைவா் விஜயநிா்மலா சரவணபவா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அ.சக்திவேல், எஸ்.சரவணன் மற்றும் உறுப்பினா்கள்.
கூட்டத்தில் பங்கேற்ற தலைவா் விஜயநிா்மலா சரவணபவா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அ.சக்திவேல், எஸ்.சரவணன் மற்றும் உறுப்பினா்கள்.

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தலைவா் விஜயநிா்மலா சரவணபவா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜி.குமரவேல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அ.சக்திவேல் (வட்டார ஊராட்சி), எஸ்.சரவணன் (கிராம ஊராட்சி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் தமிழக அரசுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிப்பது, அம்மாபேட்டை ஒன்றியப் பகுதியில் வீடுதோறும் குடிநீா் இணைப்புகள் வழங்க பூதப்பாடி ஊராட்சியில் தரைமட்டத் தொட்டி கட்டுதல், படவல் கால்வாய் ஊராட்சியில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்தேக்கத் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட 20 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து, கரோனா பாதிப்பால் உயிரிழந்த மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் மு.வேலுசாமியின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com