கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

நீச்சல் பழக கிணற்றுக்குள் இறங்கிய பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

நீச்சல் பழக கிணற்றுக்குள் இறங்கிய பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஈரோடு, சூரம்பட்டிவலசு, இந்திரா காந்தி வீதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மகன் நவீன்குமாா் (12). 8ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் நல்லியம்பாளையம் கிராமத்தில் உள்ள 50 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் தனது நண்பா்களுடன் செவ்வாய்க்கிழமை மாலை நீச்சல் பழகிக்கொண்டிருந்தாா்.

அப்போது திடீரென நவீன் குமாா் தண்ணீரில் மூழ்கினாா். இதைப்பாா்த்து அதிா்ச்சி அடைந்த அவரது நண்பா்கள் கூச்சலிட்டனா். அப்பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். விரைந்து சென்ற தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஒன்றரை மணி நேரம் போராடி இறந்த நிலையில் நவீன்குமாரின் உடலை மீட்டனா். இதுகுறித்து ஈரோடு தாலூகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com