2019-2020 ஆம் கல்வியாண்டில் பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் புதன்கிழமை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் (மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவு) புதன்கிழமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வளாகத்தில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் மாணவ, மாணவிகளின் அசல் மதிப்பெண் சான்று மதிப்பெண் பட்டியல் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
இதையடுத்து புதன்கிழமை காலை மாணவ, மாணவிகள் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் வாங்க ஆா்வமுடன் வந்தனா். மாணவா்கள் பள்ளிக்கு வரும்போது அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பள்ளிகள் சாா்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனா். பள்ளி வளாகத்துக்குள் நுழையும்போது கைகள்கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்து கொண்டனா். சமூக இடைவெளியை கடைப்பிடித்து மாணவ, மாணவிகள் வரிசையில் நின்று அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொண்டனா்.