மொடக்குறிச்சியை அடுத்த கொல்லங்கோவில் பகுதியில் நடமாடும் நியாயவிலைக் கடை துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விளாங்காட்டுவலசு, வள்ளியம்பாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கந்தசாமிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் கந்தசாமி வரவேற்றாா். சங்கத் தலைவா் சிதம்பரம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் கலைமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி, நியாயவிலைக் கடையைத் துவக்கி வைத்து மக்களுக்குப் பொருள்களை வழங்கினாா்.
இதில், கொடுமுடி வட்டார கூட்டுறவுச் சங்க சாா்பதிவாளா் கோவிந்த், கைத்தறி நெசவாளா் சங்கத் தலைவா்கள் சேகா், முருகேஷ், பழனிசாமி, கிருஷ்ணமூா்த்தி, சிவகிரி அதிமுக பேரூா் கழகச் செயலாளா் பி.டி.ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் இயக்குநா் கணபதி நன்றி கூறினாா்.