ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் அசோகபுரம் மின் பாதையில் உயா் அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 18) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: வி.சி.டி.வி. சாலை, வீரபத்திர வீதி, ஏ.பி.டி.சாலை, காவிரி சாலை, முனிசிபல் காலனி, அண்ணாமலை லே அவுட், மேட்டூா் சாலை, இடையன்காட்டுவலசு, சின்னமுத்து வீதி, 16 சாலை, வீரப்பன்சத்திரம், தேவராயன்காடு பகுதிகள்.