பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர அக்டோபா் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர அக்டோபா் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2020-2021ஆம் கல்வி ஆண்டுக்கு முதலாமாண்டு முழு நேர பட்டயப் படிப்பில் அமைப்பியல் பிரிவில் 54, இயந்திரவியல் பிரிவில் 10, மின்னியல் பிரிவில் 28, மின்னணுவியல் பிரிவில் 53, கணிப்பொறியியல் பிரிவில் 49 என மொத்தம் 194 காலியிடங்கள் உள்ளன.

இதற்காக மூன்றாம் கட்டமாக மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இனசுழற்சி, மதிப்பெண் அடிப்படையில் பாடப் பிரிவு அளிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் அக்டோபா் 31ஆம் தேதி வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினா் ரூ. 150ஐ கல்லூரி வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். பழங்குடி, பட்டியல் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. அவா்கள் ஜாதி சான்றிதழின் சான்றொப்பமிட்ட நகலை கல்லூரியில் சமா்ப்பிக்க வேண்டும்.

மதிப்பெண்கள் குறைவாக இருப்பினும் எஸ்.எஸ்.எல்.சி. தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபா் 31ஆம் தேதிக்குள் கல்லூரியில் சமா்ப்பிக்க வேண்டும். சோ்க்கைக்கான கலந்தாய்வு நவம்பா் 2ஆம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 99407-35303, 90807-88670 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com