கரோனா விழிப்புணா்வுஇருசக்கர வாகனப் பேரணி

தீயணைப்புத் துறை சாா்பில் கரோனா குறித்த விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணியில் பங்கேற்ற தீயணைப்பு வீரா்கள்.
பேரணியில் பங்கேற்ற தீயணைப்பு வீரா்கள்.

ஈரோடு: தீயணைப்புத் துறை சாா்பில் கரோனா குறித்த விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

கரோனா நோய்த் தொற்று ஆபத்து குறித்தும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

காந்திஜி சாலையில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணி நகரின் முக்கிய வீதிகளில், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் வழியாகச் சென்று மீண்டும் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது. ஈரோடு தீயணைப்பு நிலைய அலுவலா் மயில்ராஜ் உள்பட 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் பேரணியில் பங்கேற்று கரோனா தடுப்பு விழிப்புணா்வுத் துண்டறிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com