சித்தோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளின் பூட்டை திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2ஆண்டுகளாக வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டு வந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வந்தனா். இந்நிலையில், மதுரை, ஆரப்பாளையம், முட்டுத்தோப்பு, செக்கடித் தெருவைச் சோ்ந்த சோனையன் மகன் சுரேஷ் (எ) பட்டறை சுரேஷ் (31) என்பவரை பிடித்து விசாரித்தனா்.
இதில், அவா் சித்தோடு பகுதியில் பல்வேறு வீடுகளின் பூட்டை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரிடமிருந்து 25 பவுன் நகைகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.