கரோனா காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் ஈரோடு மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள விவசாயிகள் குறைதீா் கூட்டம் மீண்டும் அக்டோபா் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலால் நிறுத்தப்பட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும் என விவசாயிகள், சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதன்படி அக்டோபா் 27ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் குறைதீா் கூட்டம் மீண்டும் நடைபெறவுள்ளது.
ஈரோடு மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்கள், ஈரோடு திண்டலில் உள்ள வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் பங்கேற்கலாம்.
கோரிக்கைகளை மனுவாக எழுதி வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்கள், இணை இயக்குநா் அலுவலகத்தில் வழங்கலாம். பெறப்படும் மனுக்களுக்கு உரிய துறை மூலம் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.